ஈழக் குரல்
இரத்தக் காட்டேரிகளின் ராஜ்ஜியம்
எங்களது சிங்கள தேசம்
செழிப்பாக இருந்த எங்களுக்கு
பிடித்தது சனி ,
ஆம்! போர் என்னும் சனி.
நகரங்கள் நரகமாயின
வீடுகள் வெறுந் தரையாயின
தொழிற்சாலைகள் தொலைந்து போயின
தொல்லைகள் தொடர்ந்தன...
எங்களது மகிழ்ச்சியும் எங்களை விட்டு
சென்றது மயானத்திற்கு.
குண்டு மழை பெய்தது
மனிதர்கள் மடிந்தனர்
மயான குழிகள் நிரம்பின
பதுங்கு குழியில் பதுங்கினோம்.
பசியால் வாடினோம்
துக்கத்தில் தொலைந்தது
எங்கள் தூக்கம்.
என்ன பாவம் செய்தோம் தாயே...
ஈழத்தின் ஈனப் பிறவிகளா நாங்கள்
எங்களிக்ககும் ஒரு விடியல் வராதா?
விடியலும் வந்தது
எங்களுக்கு அல்ல போருக்கு...!
கொடுமையின் கொடுங்கோல்
ஆட்சி தொடர்ந்தது....
வழியெங்கும் கன்னி வெடிகள்
சிக்கினால் சின்னாபின்னம்.
ஆதரிக்க யாருமில்லை
அரை வயிற்று கஞ்சிக்கு அல்லல் பட்டோம்
அராஜகம் அளவு கடந்தன
ஆர்பரித்து கிளம்பினோம்
அடுத்த நாடுகளுக்கு அகதிகளாக
என்று முடியும் எங்கள்
வாழ்கை போராட்டம்...?
No comments:
Post a Comment