ஓ அலைகளே,
ஓயாத அலைகளே,
துளித் துளியாய்
மண்ணில் விழுந்தாலும்,
ஒன்றாய் சேர்ந்தால் தான்,
ஓயாமல் உழைத்தால் தான்
கரையை அடைய முடியும் என
மனிதனுக்கு உணர்த்த தான்
கரை வரை வந்து கைதட்டி
சொல்கிறாயோ...!
கவலைகளை மறக்க தான்,
அஸ்தியை கரைக்க தான்,
காதைலை வளர்க்க தான்,
கண்ணீரை துடைக்க தான்,
மகிழ்ச்சியை நிறைக்க தான்,
ஆயிரமாயிரம் கனவுகள்,
ஆயிரமாயிரம் மனிதர்கள்,
வருவோரை வாரி அணைத்து
அலை கொண்டும்,
வெண்மை நுரை கொண்டும்,
தாலாட்டும் தாயும் நீ தானா...!
ஆழி பேரலையாய்,
சீரிச் வந்து சினம் கொண்டு,
சுனாமி என்னும் பெரும் துயராய்
ஒரு நாழிகை நேரத்தில்
ஒரு கோடி உயிரை
பறித்துக் செல்வதும் நீயே,
பாய்மர படகினிலே
மீன் தேடி செல்லும்
கோடி மீனவனையும் வாழச்
செய்வதும் நீயே...!
இன்பமும் துன்பமும்
இணைந்தது தான் வாழ்வென்று
நொடிப்பொழுதும் உணர்த்திச்
செல்லத் தான் அலையாய் பிறந்து
நுறையாய் முடிகிறாயோ.