Wednesday, September 19, 2018

"நட்பென்பது யாதெனில்.."

அன்பை தருவது நட்பு,
அகந்தை அறுப்பது நட்பு,
ஆதரவு கொடுப்பது நட்பு,
ஆற்றாமை தவிர்ப்பது நட்பு,
இன்முகம் காட்டுவது நட்பு,
இழிநிலை பார்க்காது நட்பு,
ஈசனும் போற்றுவது நட்பு,
ஈடேற்றம் காணாதது நட்பு,
உரிமை கொடுப்பது நட்பு,
உத்தமம் பார்க்காது நட்பு,
ஊழ்வினையால் சேர்வது நட்பு,
ஊடலால் பிரியாதது நட்பு,
என்றும் இனியது நட்பு,
எண்ணிப் பார்க்காதது நட்பு,
ஏற்றம் கொடுப்பது நட்பு,
ஏமாற்றம் காணாதது நட்பு,
ஐம்பாலும் போற்றும் நட்பு,
ஐதீகம் பார்க்காதது நட்பு,
ஒன்றாய் இருப்பது நட்பு,
ஒருமுகம் தவிர்ப்பது நட்பு,
ஓவியமாவது நட்பு,
ஓதித் திரிவோம் உலகமெங்கும்,
ஒளவியாகும் நம் நட்பு...!

"நானும் நாணும்"

இரவில் மின்னும் நிலவு ஆதவனை கண்டதும் மறைவது நாணம்.

கருமேகம் சூழ்ந்ததும் கன நொடியில்
கண் சிமிட்டி செல்லும் மின்னல் நாணம்.

கொட்டும் மழையில் சிதிறிச் செல்லும் ஒற்றை நீர்குமிழ் நாணம்.

சுழன்றடிக்கும் காற்றின் திசையில் சுதி பார்த்து பறந்து செல்லும் பறவையின் இரட்டை சிறகு நாணம்.

வளைந்தோடும் வாய்க்கால் ஓரம், தெளிந்தோடும் நீரின் மேல், நெளிந்தாடும் ஒற்றை புல்லின் நுனியானது நாணம்.

"நானும் நாணும்" பின் நாம் ஆகும்.



"நகரத்தார் சிறப்பு"

குறிஞ்சி மலைதணில்,
சோர்ந்திருந்த முல்லைக்கு,
சார்ந்திருக்க தேர் ஈந்த
பாரி வேந்தன் ஆட்சி நடத்த..

பறம்பு மலைதனில்,
குன்றாத வளமுடன்,
குடவரை கோயிலில்,
குயிலமுத நாயகியுடன்,
கொடுங்குன்ற நாதர் வீற்றுக்க,
பாதாளம்,பூலோகம், மேலோகம் என
மூன்று லோகமும் முடிந்திருக்க,
 
சின்னமாய் புலி இருக்க,
தின்னமாய் ஆட்சி சிறக்க,
சோழ நாட்டு நகரமாம்,
சோலை வனமாம்,
காவிரி பூம்பட்டினத்தில்

காதறுந்த ஊசியும்
கடை வழியே வராது என்ற
பட்டினதாரின் வாரிசாய்,

நீதி தவறிய
மன்னனின்  ஊரை
கோவத் தீயில் எரித்த
கண்ணிகி மரபினராய்,

 காண்போர் வியக்க
 ‎கானியெங்கும் சிறக்க,
 ‎நடுநிலை தவறாது,
 ‎வாணிபம் செய்து,
 ‎நகரத்தார் எனும் பெயர் பெற்று,

மீன்களை கொடியில் இட்டு,
மீனாட்சியை நெஞ்சில் இட்டு,
வையகம் பாடும், வைகை ஓடும்
பாண்டிய நாட்டிணில் குடி பெயர்ந்து

குடிப் பட்டங்கள் பல பிரித்து,
பங்காளிகள் புடை சூழ,
படயல்கள் பல செய்து,
படைத்தவன் மனம் குளிர,
பரம்பரைகள் பல கடந்தும்,
பறைசாற்றும் பெருமைகள் இவை.

என்பிரான் மலையடியில்,
நம் பிள்ளைகள் இனம் சேர,
இறை மனம் சிறக்க,
திருமணம் நடக்க
மண்டபம் அமைத்து
மகுடம் சேர்த்தோம்.

சிறார்கள் சிறகடிக்க,
மாணவர்கள் மதி சிறக்க,
கல்வியில் கரை கடக்க,
கல்வி வளர்ச்சி குழு அமைத்தோம்.

அன்பின் பிறப்பிடமாய்,
ஆனந்தத்தின் சேர்விடமாய்,
இன்பத்தின் இருப்பிடமாய்,
ஈடில்லா இனக்கத்துடன்,
உறவினர்கள் ஒருசேர,
ஊற்றெடுக்கும் பாசத்தோடு,
எல்லைகள் பல கடந்து,
ஏனைய வேலைகள் புறந்தள்ளி,
ஐயன் அவனின் அருளோடு,
ஒருமிக்க இங்கே கூடி,
ஓராயிரம் கதைகள் பேசி,
 ஒளவியம் கொள்ளும் குடும்பத்தினர்    ஆனோம்..!




"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...