நன்முறை காட்டினும்
நானிலத்தில் யாவர்க்கும்
கேட்டிட நேரமில்லை,
சொல்லும் அருகதை
உணக்குண்டோ வென
வினவிடவே முன்னிற்க
எரியும் நெருப்பது
தொட்டால் சுடுமென
சொல்லியும் கேளா
தொட்டுப் பார்த்தபின்
சுட்டதென துடிப்பதென்
மானுட அறிவோ?
நாகரிக வளர்ச்சியில்
தான் நம்மை நாமே
தொலைப்பதென்ன?
தொண்குடி பிறந்திட்டும்
தொக்கிட்டு நிற்பதென்ன?
சேர சோழ பாண்டியரும்
சேரவிங்கு அரசாண்டு,
தன்மக்கள் தான்சிறக்க
தணியாத தாகத்தில்
போர்க்களம் புகுந்து
எதிர்ப்படும் எதிரியை
வெட்டி வீழ்த்திட,
வீரம் சொரிந்துடும்
ஒவ்வொரு அணுக்களும்
வீணாய் போனதென்ன?
வாணிபம் செய்திட
வந்திறங்கிய அண்ணியரை
வாசலோடு அனுப்பிடாது,
உபசரிக்கும் தன் குணத்தை
உபரியாக காட்டிட,
உப்பிட்ட வீட்டினில்,
உதவிட்ட நாட்டினில்,
நரித்தனம் காட்டி,
நாட்டை அடிமையாக்கி அரசாள,
நூற்றாண்டுகள் பலகடந்து
அகிம்சா கடைபிடித்து,
பெற்ற சுதந்திரம் தனை
காற்றில் பறக்கவிட்டு
கைகட்டி நிற்ப தென்ன ?
ஆரியணவன் வந்ததினால்
ஆத்ம வேதமது ஓதியதால்,
ஆச்சரியப்பட்டு நின்றதனால்,
ஒன்றாய் நின்ற தமிழன் தனை,
நால்வர்ணம் தனை புகுத்தி,
குலம்,கோத்திரம் என
தன்னை உயர்வாக்கி,
தமிழனை தறியாக்கி,
நெய்தவனை தோலுரித்து,
சட்டைக்கும் செருப்பிர்க்கும்
சாதியை சாக்குகாட்டி
சாதிக்க பிறந்தவனை
சூத்திரனென சுட்டிக்காட்டி
இன்றளவும் அடக்கி
ஆண்டுகொண்டு இருப்பவனை
கைகட்டி வேடிக்கை பார்பதென்ன?
மேற்கே அண்ணியனும்
வடக்கே ஆரியனும்
வந்தது போதாதென,
இல்லாத திராவிடத்தை,
இருப்பதென பொய்யுறைத்து,
அரியணை ஆசையில்
நாத்திகன் என தானுரைத்து
சோசியரின் சொல்படி
மஞ்சள் துண்டும்,
மரகத கல் மோதிரமும்
அணிந்துங்கு ஆட்சி செய்ய,
கொள்கை கோட்பாடெல்லாம்
காசின் முன் இடுகாடு செல்ல,
இடுகாட்டு கூரை முதல்
இடற்படும் காற்று வரை
அத்தனையும் விற்றிங்கே
விழுங்கி நிற்கும்
அரசியல் அயோக்கியர் களை
களை எடுக்க துணிவின்றி
தூனாய் நிற்பதேன்ன?
நெல்லும் கம்பும்
உயர்வரகும் சாமையும்
கேப்பையும் கொண்டு
உறுதியாய் இருந்தகாலம்
கணவாகிப் போனதேனோ?
பீசாவும், பர்க்கரும்
காற்றடைத்த பண்டங்களும்
நாவின் சுவை தீர்க்க,
ஆயுளின் காலமது
ஆவியாய் போவதை
உணரத் தான் மறுப்பதென்ன?
ஈராயிரம் ஆண்டுகளாய்
எவ்விதமும் குன்றாது
அழகுத் தமிழின்
ஆழமது புரியாது,
அடிமை கொண்டவனின்
ஆளுமை பெரிதென
அவன் மொழியினை
கொண்டாடி களிப்பதென்ன?
கேளாய் தமிழா,
நான் இயம்புவதை விடினும்,
நீ கேள்வியுற்றதை விடிணும் உன்
பாரம்பரியமும், பண்பாடும்,
நீண்டது, மிக நெடியது.
தலைமுறை பல கடந்து
தழைத்தோங்கும் நம் மரபை,
துளிர்க்கும் தளிராக,
மனதில் நட்டுவிடு,
ஒருநாள் பூவாய் மலர்ந்திடும்,
நம்பிக்கையோடு காத்திரு!!!