வாழ்க்கைக்கான
அர்த்தம் தேடிடும்,
அற்புத பயணத்தில்,
இன்று ஓர்
புதிய அத்தியாயம்
எழுத தொடங்கு,
நேற்றும் இன்றும்
வேறல்ல.
அதே வானம்,
அதே விண்மீன்.
பயணம் ஒன்றுதான்,
இலக்கு ஒன்றுதான்,
திசை ஒன்றுதான்,
ஆனால், பாதைகள் வெவ்வேறு.
செல்லும் வழியில்,
சுழல்,சூழல் கண்டறி.
நம்பிக்கையோடு நடைபோடு.
நடக்கும் தூரம்
நமக்குப் பாடம்.
புத்தகத்தின் பக்கங்கள்
தாண்டி, இந்த உலகம்
மிக பெரிது.
தீயென விடு.
நல்லன நாடு,
புதியன கல்.
விரும்பியன செய்.
காலம் உனக்கு
சகலமும் போதிக்கும்.
உந்துதல் இல்லா
முன்னேற்றம் உண்டோ.
போதனைகள் யாவும்
போதாது இவ்வுலகில்,
களம் கண்டு போராடு
வெற்றியோ தோல்வியோ
வீரமுடன் போராடு.
வென்றால் மகிழ்வோம்
வீழ்ந்தால் எழுவோம்.
நீரின் ஓட்டத்தில்
திரும்பி விடாதே,
உனக்கான திசையில்
எதிர்நீச்சல் போட்டிடு.
தண்ணீரில் கண்ணீரை
கரைத்து விடு,
கரை தொடும் நேரம்
வெற்றி உன் கால் தொடும்.
கண்ணீர் துளிகள்
வழிந்திடும் கன்னத்தில்
வியர்வை துளிகள்
வழிகிறதா...
நீ வெற்றிக்கான
பாதையில் பயணிக்க
தொடங்கி விட்டாய்
என அர்த்தம் கொள்.
வாழ்த்துக்களுடன்,
இ. முத்தழகன்