Saturday, February 8, 2020

"அவள்தான் அவளேதான்"

அவள்தான்,
பாவும் மாவும் டாவும்
ஓயாமல் ஒலித்த 
எந்தன் நாவினில்
(அண்)நா, (அண்) நீ என
 புதுமொழி புகுத்தியவள்
அவள்தான்.

அவள்தான்,
பா - சொரியும் எங்கள் வீட்டினில்
புன்னகையாய் பூச் சொரிய
வந்தவளும்,
 அவள்தான்.
 
அவள்தான்,
கால்நூற்றாண்டு
காலமாய் ஆண்மகவு
அதிக்கம் புரிந்த 
எங்கள் வீட்டினை
அமைதியாய் ஆட்கொள்ள
வந்தவளும்
 அவள்தான்.
 
அவள்தான்,
மாத்திரைகள் வாசம்
புரிந்த எங்கள் வீட்டினில்
மூலிகைகளின் சுவாசம்
புரியச் செய்தவளும்
அவள்தான்.

அவள்தான்,
வேட்டி,சட்டை, சேலை
மட்டுமே கண்டு
காய்ந்து போன
எங்கள் வீட்டு கொடிகளுக்கு
சுடிதாரின் தரிசனம் தந்தவளும்
அவள்தான்.

அவள்தான்,
கண்மையும், முகப்பூச்சும்
கண்டிராத எங்கள் வீட்டு
கண்ணாடிகளுக்கு
ஃபேர் அன் லவ்லி
காட்டி கண் திறந்து வைத்தவளும்
 அவள்தான்.

அவள்தான்,
தாயும் தந்தையுமாய்
இருந்த எந்தன்
பெற்றோர்களுக்கு
தாத்தா பாட்டியாய்
பதவி உயர்வு 
அளிக்க போவதும்
 அவள்தான்.

"அவள்தான்,
அவளேதான்"
எந்தம் இல்லத்தின்
புதியதோர் 
பட்டத்து இளவரசிக்கு
எந்தன் புது தாயவளுக்கு
இந்த கவிமகனின்
மனமார்ந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
🍰🎁🎂🎈🎉

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...