Monday, August 27, 2018

அண்ணனுக்கு அன்பு வாழ்த்துக்கள்

உருவம் பெறும் முன்னே,
உலகம் வரும் முன்னே,
உணர்வோடும் உயிரோடும்,
உறவாட உடன்பிறப்பாய்
என்றும்- ஒன்றானாய்.

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழாய்,
அன்பு செய்யும் போது களிக்கவும்
அகந்தை செய்யும் போது கழிக்கவும்,
அன்பனாய், ஆசானாய்- இரண்டானாய்.

பிறந்த போது விரல் கொடுத்தாய்,
வளரும் போது கை கொடுத்தாய்,
விழும்போதெல்லாம் தோள் கொடுத்தாய்,
அக்காலம்,இக்காலம் எக்காலமும்
எனக்குதவி - மூன்றானாய்.

நல்லதுமாய் வல்லதுமாய் செய்லகள் செய்ய,
நாற்புறமும் அரணாய் நின்று,
எனைக்காத்து- நான்றானாய்.

நிமிரும் போது வேற்றுமையாய்,
குனியும் போது ஒற்றுமையாய்,
உணர்ந்(த்)திடும் கை விரல்களாய்
என்றும் - ஐந்தானாய்.

ஐந்தோடு ஐந்தானல் - பத்தாததாகும்,
ஐந்தோடு ஐந்தாக பெருக்கிட கேட்டேன்,
கால் நூற்றாண்டு கடந்தின்று
இருபத்தி -  ஆறானாய்.

எண்ணுவதெல்லாம் எழுத்தாகது,
பூப்பணவெல்லாம் பழமாகாது,
என ஏளனச்  சிரிப்பு சூழ்ந்துவர,
அழும் மெழுகும் எரிவதுண்டு,
எழுபதும் எழுவதுண்டு என எனை
நம்பிக்-கை கொடுத்தாய்,
ஒற்றை பிறப்பும் போதுமெனக்கு
பிறவிகள் - ஏழானாய்.

கலங்கி நின்றால் குட்டையும் கடல்தான்,
விழித்து எழுந்தால் கடலும் குட்டை தான்,
அன்பைக் காட்ட அறிவை புகட்ட
அண்ணனாக நீ இருந்தால்,
எட்டாத தூரமென்று எதுவுமில்லை
எழுச்சிமிகு பாட்டானாய்
எனக்கென்றும் -  எட்டானாய்.

அறிவிட்டு,அன்பிட்டு,
உணவிட்டு,உணர்விட்டு
உயிரிட்டு, உரமிட்டு,
படியெட்டு கடந்திட்டு
உடன் பிறப்பாய் - ஒன்பதானாய்.

பத்து விரல் எண்ணினாலும்,
பத்தாது உன் விலை சொல்ல,
பக்கத்தில் இருந்து பார்த்தவனாய்,
உன் வாழ்ககை பக்கத்தின் எழுத்தவனாய்,
என்றும் அழியாத மையாய்,
என்றும் விலகாத மையமாய்,
பத்தாத என் நெஞ்சினிலே
என்றென்றும் - பத்தானாய்.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே...!


















Tuesday, August 14, 2018

இது "சு-தந்திரம்"


“இது சு–தந்திரம்”



உணவை படைக்கும் உழவனின் வீட்டில்
அடுத்த வேளை உலை வைக்க வழி இல்லை- எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

பட்டொளி வீசி பறந்து நிற்கும் தேசிய கொடியை நெய்த நெசவுத் தொழில் சாகக் கிடக்க - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

கோடிகளை கொள்ளை கொண்ட அரசியல் தலைவர்கள் சுதந்திரமாய் கோட்டையில் கொடி ஏத்துகையில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

படுகுழி பாதையில்,  உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் எம் பள்ளிக் குழந்தைகள் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

கழிவறை கூட இல்லாத அரசுப் பள்ளிகள், அரவணைக்க இயற்கை என்ற நிலையில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

பால் மணம் மாறாத பிஞ்சு பெண் குழந்தைகளுக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை எனும் போது - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

பணமிருந்தால் கொலை கூட குற்றமில்லை இந்த வஞ்சகர் பூமியில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

காலை விடிந்ததும் கவுருவக் கொலைகளை வரிசை படுத்தும் நாளிதழ்கள் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.


சுதந்திரத்தின் நோக்கத்தை தொலைத்து விட்ட நமக்கு எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினமன்று மட்டும் மலையென குவியும் வாழ்த்தெதற்கு.

  உயிரற்ற செல்லின் வழியே சொல்வதல்ல, உயிரிலுள்ள ஒவ்வொரு செல்லும் சொல்லிட வேண்டும் நாம் இந்தியரென.
 


"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...