Friday, December 4, 2020

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான்.


“எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்”


🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும் சீர்குலைக்காதவாறு உறுதியாக இருப்பேன்.


🔮நான் சந்திக்கும் ஒவ்வொரு  நபரிடமும்  மகிழ்ச்சி, செழிப்பு, உடல்நலம் பற்றி பேசுவேன்.


🔮 நான் சந்திக்கும் ஒவ்வொரு  நபரிடமும்  அவர்களுக்குள்  இருக்கும் சக்தியை உணரச் செய்வேன்.


🔮ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்த்து எனது நம்பிக்கையை மெருகேற்றி கொள்வேன்.


🔮சிறந்ததை மட்டுமே எண்ணுவேன், சிறந்ததை மட்டுமே 

செய்வேன்,சிறந்ததை மட்டுமே எதிர்பார்ப்பேன்.


🔮 மற்றவர்களின் சந்தோசத்தை எனது சந்தோசமாக  எண்ணி பூரிப்படைவேன் .


🔮கடந்த கால தவறுகளை மறந்து, எதிர்காலத்தில் நான் அடையப் போகும் பெருமைகளை எண்ணி வீறுநடை போடுவேன்.


🔮 நான் எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே எண்ணுவேன்                        மற்றும்   நான் சந்திக்கும் ஒவ்வோர் உயிரிடமும் புன்சிரிப்பை காட்டுவேன்.


🔮 பிறரை குறை சொல்ல நேரமே இல்லாத வகையில் என்னை

மெருகேற்றி உயர்த்தி கொள்ள பெரும் நேரம்  செலவிடுவேன்.


🔮 சோகத்தில் அமைதியாகவும், கோவத்தில் தன்மையாகவும், பயத்தில் உறுதியாகவும்,  தொல்லைகள் வரும் பொழுதும் மனம் முழுதும் மகிழ்ச்சியை பரவிட செய்வேன்.


🔮 என்னுடைய  நலனில் முழு கவனம் செலுத்தி அதை சொல்லால்அல்லாமல் செயலால் இந்த உலகிற்கு பேரறிவிப்பு  செய்திடுவேன்.


🔮என்னுடைய மனசாட்சியின் பால் நேர்மையாக இருப்பேன்,இதனால் இந்த பிரபஞ்சமே எனக்கு துணையாய்  நிற்கும் .


                                                                                     ஆக்கம் - கிறிஸ்டின் டி  லார்சன் 

                                                                                      தமிழில் - முத்தழகன் இ 

(இந்த கட்டளைகளை தினந்தினம் காலை பிரகடனம் செய்யுங்கள். மேலும் அறிந்து கொள்ள ரோண்டா ப்யர்னே எழுதிய "ரகசியம்" புத்தகத்தை வாசிக்கவும்  )


❣️❣️❣️

“அன்பை பெற வேண்டுமா...

உங்களை அன்பால் மூழ்கடித்து கொள்ளுங்கள்,

 நீங்கள் ஒரு காந்தமாக மாறும் வரை”

❣️❣️❣️

1 comment:

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...