Sunday, August 4, 2019

"உரையும் - நடையும்"

பாவே,
பாரதியை,
"நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்",
வேண்டும் பெண்டிற்கு   என்றாயே,
மெய்த்துப் பொய்தனவோ உன் வரிகள்
உன் சொல்லால் உயர்ந்து - இன்று
செல்லால் குனிந்த பெண்டிர் குலத்தை
காண தான் வாராயோ...!


அறிவே,
அவ்வையே,
"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என
நல்வழி சொன்னாயே,
பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடிய பொன்னிலத்தில்
ஆற்று மணல் அல்ல
லாரிகள் ஓடுவதை கானத்தான் வாராயோ...!


வண்டமிழ் வேந்தனே,
வள்ளுவனே,
"மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என விழிச்சொல் கொடுத்தாயே,
கண்டனம் ஏதும் இன்றி
அங்கொன்றும் இங்கொன்றும்
கண்டதும் பகிர்வதை
காண தான் வாராயோ...!


இனியனே இளங்கோவடியே,
"அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்" என
அருஞ்சொல் வீசினாயே,
அரசியலில் பிழைப்பதற்கு
அறமே எதிரியாகும்
என வாய்பாடு வகுத்து
வஞ்சகம் புரிவோரை
காண தான் வாராயோ...!


கவிசக்கரவர்த்தியே,
கம்பர் பெருமானே,
"பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?"
என பாடம் சொன்னாயே,
உன் பாட்டதும் மறந்து,
பின் பட்டதும் மறந்தும்,
வேண்டா சொல்லயே
வேதமாய் கொண்டலையும்,
மதிகெட்ட மனிதர்களை
காண வொருமுறை வாராயோ...!


மாணிக்கமே,
திரு வாசகனே,
"சொல்லிய பாட்டின்
பொருள் உணர்ந்து"
என கற்றல் வழி சொன்னாயே,
கற்றல் மொழி மறந்து
கத்தல் மொழியை
வழியாக்கி பின் வலியாக்கிய எம்மை
காண வொருமுறை வாராயோ...!


கற்கும் கல்வியதை
மதிப்பெண் தரும்
பாரமாய் பாராமல்
மதிப்பளிக்கும் மதியுமாய்
பொருளளிக்கும் பொண்ணுமாய்
"கற்றபின் நிற்க அதற்கு தகவென"
வள்ளுவன் வழி நடந்திடுவோம்...!








"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...