இகல் வெல்லும் இழிச்சொல்லும்,
பகை வெல்லும் பழிச்சொல்லும்,
முன்செல்ல துதிபாடி,
பின்செல்ல சதிபாடி,
வஞ்சப் புகழ்ச்சியாய்
கெஞ்சிப் பிழைக்கும் பிழைப்பெதற்கு?
அதிகார திமிர் காட்டி,
ஆணவத்தின் முகம் காட்டி,
ஆளுக்கொரு வேசம் காட்டி,
அண்டி வந்தவரை,
அகம் மகிழ முகம் காட்டி,
அடினெஞ்சில் பகை காட்டி,
அடிமை கோலம் செய்ய,
அடிபணிய செய்வதேனோ?
வெஞ்சினிம் தீர்த்திட,
வென்சாமர கொடியெதற்கு?
ஆறாய் நெளிந்தோடும்
கண்ணீர்க்கு கடைமதகெதற்கு?
கசக்கி எறிந்த காகிதத்திற்கு
மரண தண்டனை தான்னெதற்கு?
கோவலனை கொன்றபின்
கண்ணகிக்கு கோயிலெதற்கு?
அறியா மானுடமே - பிறரை
மதியா மானுடனே,
கருவறை வாசலில்
பிரசவித்த மறுநொடியே
அன்பின் கயிறான
தொப்புள் கொடிபோல
கத்தரிப்பது ஏனோ?
கலியுக மாணுடனே
காலத்தின் ஓடத்தில்
ஓடிக்கொண்டே இரு
நின்றுவிட்டால்...
நதி என்பார்கள்
குறைந்து விட்டால்...
குளம் என்பார்கள்
குனிந்து விட்டால்...
குட்டை என்பார்கள்
தேங்கி விட்டால்...
சாக்கடை என்பார்கள்
நித்தம் பொழிவுரும்
நதியின் தூய்மையா?
நித்தம் கழிவுரும்
சாக்கடையின் நாற்றமா
உன் முடிவை என்னது?
போனதுதான் போகட்டும்
போரது முடியட்டும்
போதையது தெளியட்டும்
ஆவேசம் குறையட்டும்
அன்பது புரியட்டும்..
உணர்ந்திடு மானிடா - இது
உனக்கே உனக்கான உலகம்,
அன்பு விசை கொண்டு
அகிலத்தை பார்,
உள்ளம் அழகாகும்.
காலச் சக்கரத்தை
அன்பு கொண்டு சுழற்றிடு,
ஒவ்வொரு அடியும்
உன்னதமாக கடக்கும்.
அரபிக் கடலின்
அழகிய மீனாய்
அன்பு கடலில்
மூழ்கி முத்தெடு.
கடந்திட்ட காலம்தான்
கடலோடு போகட்டும்,
இனிவரும் காலம்தான்
இன்பமாய் கழியட்டும்...!