உருவம் பெறும் முன்னே,
உலகம் வரும் முன்னே,
உணர்வோடும் உயிரோடும்,
உறவாட உடன்பிறப்பாய்
என்றும்- ஒன்றானாய்.
அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழாய்,
அன்பு செய்யும் போது களிக்கவும்
அகந்தை செய்யும் போது கழிக்கவும்,
அன்பனாய், ஆசானாய்- இரண்டானாய்.
பிறந்த போது விரல் கொடுத்தாய்,
வளரும் போது கை கொடுத்தாய்,
விழும்போதெல்லாம் தோள் கொடுத்தாய்,
அக்காலம்,இக்காலம் எக்காலமும்
எனக்குதவி - மூன்றானாய்.
நல்லதுமாய் வல்லதுமாய் செய்லகள் செய்ய,
நாற்புறமும் அரணாய் நின்று,
எனைக்காத்து- நான்றானாய்.
நிமிரும் போது வேற்றுமையாய்,
குனியும் போது ஒற்றுமையாய்,
உணர்ந்(த்)திடும் கை விரல்களாய்
என்றும் - ஐந்தானாய்.
ஐந்தோடு ஐந்தானல் - பத்தாததாகும்,
ஐந்தோடு ஐந்தாக பெருக்கிட கேட்டேன்,
கால் நூற்றாண்டு கடந்தின்று
இருபத்தி - ஆறானாய்.
எண்ணுவதெல்லாம் எழுத்தாகது,
பூப்பணவெல்லாம் பழமாகாது,
என ஏளனச் சிரிப்பு சூழ்ந்துவர,
அழும் மெழுகும் எரிவதுண்டு,
எழுபதும் எழுவதுண்டு என எனை
நம்பிக்-கை கொடுத்தாய்,
ஒற்றை பிறப்பும் போதுமெனக்கு
பிறவிகள் - ஏழானாய்.
கலங்கி நின்றால் குட்டையும் கடல்தான்,
விழித்து எழுந்தால் கடலும் குட்டை தான்,
அன்பைக் காட்ட அறிவை புகட்ட
அண்ணனாக நீ இருந்தால்,
எட்டாத தூரமென்று எதுவுமில்லை
எழுச்சிமிகு பாட்டானாய்
எனக்கென்றும் - எட்டானாய்.
அறிவிட்டு,அன்பிட்டு,
உணவிட்டு,உணர்விட்டு
உயிரிட்டு, உரமிட்டு,
படியெட்டு கடந்திட்டு
உடன் பிறப்பாய் - ஒன்பதானாய்.
பத்து விரல் எண்ணினாலும்,
பத்தாது உன் விலை சொல்ல,
பக்கத்தில் இருந்து பார்த்தவனாய்,
உன் வாழ்ககை பக்கத்தின் எழுத்தவனாய்,
என்றும் அழியாத மையாய்,
என்றும் விலகாத மையமாய்,
பத்தாத என் நெஞ்சினிலே
என்றென்றும் - பத்தானாய்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே...!
No comments:
Post a Comment