குறிஞ்சி மலைதணில்,
சோர்ந்திருந்த முல்லைக்கு,
சார்ந்திருக்க தேர் ஈந்த
பாரி வேந்தன் ஆட்சி நடத்த..
பறம்பு மலைதனில்,
குன்றாத வளமுடன்,
குடவரை கோயிலில்,
குயிலமுத நாயகியுடன்,
கொடுங்குன்ற நாதர் வீற்றுக்க,
பாதாளம்,பூலோகம், மேலோகம் என
மூன்று லோகமும் முடிந்திருக்க,
சின்னமாய் புலி இருக்க,
தின்னமாய் ஆட்சி சிறக்க,
சோழ நாட்டு நகரமாம்,
சோலை வனமாம்,
காவிரி பூம்பட்டினத்தில்
காதறுந்த ஊசியும்
கடை வழியே வராது என்ற
பட்டினதாரின் வாரிசாய்,
நீதி தவறிய
மன்னனின் ஊரை
கோவத் தீயில் எரித்த
கண்ணிகி மரபினராய்,
காண்போர் வியக்க
கானியெங்கும் சிறக்க,
நடுநிலை தவறாது,
வாணிபம் செய்து,
நகரத்தார் எனும் பெயர் பெற்று,
மீன்களை கொடியில் இட்டு,
மீனாட்சியை நெஞ்சில் இட்டு,
வையகம் பாடும், வைகை ஓடும்
பாண்டிய நாட்டிணில் குடி பெயர்ந்து
குடிப் பட்டங்கள் பல பிரித்து,
பங்காளிகள் புடை சூழ,
படயல்கள் பல செய்து,
படைத்தவன் மனம் குளிர,
பரம்பரைகள் பல கடந்தும்,
பறைசாற்றும் பெருமைகள் இவை.
என்பிரான் மலையடியில்,
நம் பிள்ளைகள் இனம் சேர,
இறை மனம் சிறக்க,
திருமணம் நடக்க
மண்டபம் அமைத்து
மகுடம் சேர்த்தோம்.
சிறார்கள் சிறகடிக்க,
மாணவர்கள் மதி சிறக்க,
கல்வியில் கரை கடக்க,
கல்வி வளர்ச்சி குழு அமைத்தோம்.
அன்பின் பிறப்பிடமாய்,
ஆனந்தத்தின் சேர்விடமாய்,
இன்பத்தின் இருப்பிடமாய்,
ஈடில்லா இனக்கத்துடன்,
உறவினர்கள் ஒருசேர,
ஊற்றெடுக்கும் பாசத்தோடு,
எல்லைகள் பல கடந்து,
ஏனைய வேலைகள் புறந்தள்ளி,
ஐயன் அவனின் அருளோடு,
ஒருமிக்க இங்கே கூடி,
ஓராயிரம் கதைகள் பேசி,
ஒளவியம் கொள்ளும் குடும்பத்தினர் ஆனோம்..!
சோர்ந்திருந்த முல்லைக்கு,
சார்ந்திருக்க தேர் ஈந்த
பாரி வேந்தன் ஆட்சி நடத்த..
பறம்பு மலைதனில்,
குன்றாத வளமுடன்,
குடவரை கோயிலில்,
குயிலமுத நாயகியுடன்,
கொடுங்குன்ற நாதர் வீற்றுக்க,
பாதாளம்,பூலோகம், மேலோகம் என
மூன்று லோகமும் முடிந்திருக்க,
சின்னமாய் புலி இருக்க,
தின்னமாய் ஆட்சி சிறக்க,
சோழ நாட்டு நகரமாம்,
சோலை வனமாம்,
காவிரி பூம்பட்டினத்தில்
காதறுந்த ஊசியும்
கடை வழியே வராது என்ற
பட்டினதாரின் வாரிசாய்,
நீதி தவறிய
மன்னனின் ஊரை
கோவத் தீயில் எரித்த
கண்ணிகி மரபினராய்,
காண்போர் வியக்க
கானியெங்கும் சிறக்க,
நடுநிலை தவறாது,
வாணிபம் செய்து,
நகரத்தார் எனும் பெயர் பெற்று,
மீன்களை கொடியில் இட்டு,
மீனாட்சியை நெஞ்சில் இட்டு,
வையகம் பாடும், வைகை ஓடும்
பாண்டிய நாட்டிணில் குடி பெயர்ந்து
குடிப் பட்டங்கள் பல பிரித்து,
பங்காளிகள் புடை சூழ,
படயல்கள் பல செய்து,
படைத்தவன் மனம் குளிர,
பரம்பரைகள் பல கடந்தும்,
பறைசாற்றும் பெருமைகள் இவை.
என்பிரான் மலையடியில்,
நம் பிள்ளைகள் இனம் சேர,
இறை மனம் சிறக்க,
திருமணம் நடக்க
மண்டபம் அமைத்து
மகுடம் சேர்த்தோம்.
சிறார்கள் சிறகடிக்க,
மாணவர்கள் மதி சிறக்க,
கல்வியில் கரை கடக்க,
கல்வி வளர்ச்சி குழு அமைத்தோம்.
அன்பின் பிறப்பிடமாய்,
ஆனந்தத்தின் சேர்விடமாய்,
இன்பத்தின் இருப்பிடமாய்,
ஈடில்லா இனக்கத்துடன்,
உறவினர்கள் ஒருசேர,
ஊற்றெடுக்கும் பாசத்தோடு,
எல்லைகள் பல கடந்து,
ஏனைய வேலைகள் புறந்தள்ளி,
ஐயன் அவனின் அருளோடு,
ஒருமிக்க இங்கே கூடி,
ஓராயிரம் கதைகள் பேசி,
ஒளவியம் கொள்ளும் குடும்பத்தினர் ஆனோம்..!
No comments:
Post a Comment