Wednesday, September 19, 2018

"நானும் நாணும்"

இரவில் மின்னும் நிலவு ஆதவனை கண்டதும் மறைவது நாணம்.

கருமேகம் சூழ்ந்ததும் கன நொடியில்
கண் சிமிட்டி செல்லும் மின்னல் நாணம்.

கொட்டும் மழையில் சிதிறிச் செல்லும் ஒற்றை நீர்குமிழ் நாணம்.

சுழன்றடிக்கும் காற்றின் திசையில் சுதி பார்த்து பறந்து செல்லும் பறவையின் இரட்டை சிறகு நாணம்.

வளைந்தோடும் வாய்க்கால் ஓரம், தெளிந்தோடும் நீரின் மேல், நெளிந்தாடும் ஒற்றை புல்லின் நுனியானது நாணம்.

"நானும் நாணும்" பின் நாம் ஆகும்.



No comments:

Post a Comment

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...