நம் பாரதம்
வேற்றுமையாம் அதில் ஒற்றுமையாம்
என்றுரைத்திடுவார் நம் பாரதத்தார்,
அண்டை நாட்டிற்கும்
அடுத்த வீட்டிற்கும்
தண்ணீரும் பல நன்னீரும்
தர மறுத்திடுவார் அதை தடுத்திடுவார்,
ஏட்டினிலும் பல பாட்டினிலும்
ஜாதிகளும் பல மதவாதிகளும்
மதங்களும் அதில் பல இனங்களும்
அன்றென்பார் இனி நன்றென்பார்.
சிறார்க்கு,
ஜாதி உணர்ச்சிகளையும்
மத எழுச்சிகளையும்
ஊட்டிடுவார் பின் தினித்திடுவார்.
தீண்டாமை குற்றம் என ஏட்டினிலும்
தீண்டினால் குற்றம் என வீட்டினுலும்
இருந்திருக்கும் அதனின்
மனம் திகைத்திருக்கும்
மெல்ல வெறுத்திருக்கும்.
No comments:
Post a Comment