உழவும் உலகும்
வானம் பார்த்த பூமி
வர்ணம் தீட்டும் மேகம்
வரப்பு வழி வாய்கால்
வயல்வெளி இது உணவின் வழி.
தன் பிம்பத்தை பார்த்து
இரசிக்கும் மனிதனாய்
தன் நிழல் பார்த்து-ரசித்து
சிலிர்க்கும் மரங்கள்
நீண்ட மரம் இது நீங்கா வரம்
புண்ணாக்கு போடுபவனை
புல்லறுத்து தருபவனை
தொழுது- உழுகும் பொழுது
புல்லரிக்கும் காளை
விவசாயம் இது விசுவாசம்
வற்றிருக்கும் தொண்டை
ஊற்றெடுக்கும் கிணறு
சுற்றிருக்கும் படிகள்
வட்டக் கிணறு இது வற்றாத கிணறு.
வயலெங்கும் சேறு
சேற்றில் வளரும் செந்தாமரையாய்
செழித்துவளரும் நாத்து
பச்சை கிணறு இது பசுமையின் உயிர்.
துள்ளி திரியும் கன்று
தூர நின்று ரசிக்கும் பசு
விளையாட்டு பருவம்...
பாச பிணைப்பு இது கடவுளின் படைப்பு
அன்றாடம் வளரும்
அருகாமையில் துளிரும்
விதைக்காமல் விசும்பும்
களைகள் இது மண்ணின் விதைகள்.
நெளியும் புழு
ஒளியும் பாம்பு
நகரும் நண்டு
உழவனின் தோழமை இது உயிர்களின் ஒற்றுமை.
உடம்பெல்லாம் சேறு
அறைவயிற்றுச் சோறு
வேர்வை உரமிட்டு
உயிர் வழி காக்க உடல் வலி மறந்து
தன்னிலம் இன்றி நன்னிலம் உழுது
உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார்- இங்கே
உணவிட்டனும் உயிரிட்டவனும் கடவுளே
விமர்சனம் இது தான் நிதர்சனம்.
No comments:
Post a Comment