Tuesday, December 26, 2017

சூழ்நிலை அறிந்து போட்டியிடு

நம் அனைவருக்கும் தெரிந்த முயல் ஆமை கதையை மையமாக வைத்து இந்த கட்டுரையை பார்க்கலாம்.

1. ஆமையும் முயலும் போட்டிக்கு ஒத்து கொள்கின்றன. இரண்டும் ஓட ஆரம்பிக்கின்றன. ஆமையை விட அதிக தூரம் சென்று விட்ட முயல்,  ஆமை வர தாமதமாகும் என்று எண்ணி மர நிழலில் தூங்கி விடுகிறது. ஆமை முன்னேறி சென்று வென்று விடுகிறது.
நீதி: மித வேகம் மிக நன்று.

2. முயல் தான் அதீத நம்பிக்கை மற்றும் சோம்பேறி தனம் காரணமாக தான் தோற்றோம் என்பதை உணர்ந்து மறுபடி போட்டிக்கு அழைக்கிறது. ஆமையும் போட்டிக்கு ஒத்துக் கொள்ள மறுபடி ஓட்டம் ஆரம்பிக்கிறது. இந்த முறை ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகச் சென்று வெற்றி பெறுகிறது முயல்.
நீதி: வேகமும் நிதானமும் எப்போதும் வெல்கிறது.

3. இப்போது நடக்கும் போட்டி முறையில் எப்போதும் நான் முயலை தோற்கடிக்க முடியாது என ஆமை உணர்கிறது. வேறு ஒரு புதிய முறையில் யோசித்து முயலை போட்டிக்கு அழைக்கிறது. எப்போதும் போல் முயல் வேகமாக ஓடி வருகிறது ஆனால், சிறிது தூரம் கடந்ததும் ஒரு ஆறு வருகிறது அதில் நீந்தி சிறிது தூரம் சென்று வெற்றி அடைய வேண்டும். அதை எப்படி கடந்து செல்வது என எண்ணிக் கொண்டு இருக்கும் போது, ஆமை நீரில் குதித்து நீந்தி சென்று வெற்றியை அடைகிறது.

நீதி: உள் ஆளுமை திறன் அறிந்து அதற்கேற்ற முறையில் உங்களது போட்டியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

4. இப்போது முயலும் ஆமையும் நண்பர்களாக மாறி விடுகின்றன. இருவரும் இணைந்து செயல்பட தயாராகின்றன. இந்த முறை இருவரும்  ஓட தயாராகின்றன ஆனால் இந்த முறை ஒரே அணியாக. போட்டியை ஆரம்பித்ததும் முயல் ஆமையை ஆற்றை அடையும்  வரை சுமந்து சென்றது. பின் ஆற்றில் நீந்தி செல்கையில் ஆமை முயலை சுமந்து செல்கிறது. பின் இருவரும் இணைந்து வெற்றி கோட்டை அடைகின்றன.

நீதி: தனி தனியாக உத்வேகம் அடைதலும் உள் ஆளுமை திறன் அறிதலும் இருத்தல் நலமே. ஆனாலும் ஒரு அணியாக செயல்பட்டால் வளர்ச்சி பன் மடங்கு பெருகும். ஒரு சில வேளை உங்களால் சிறப்பாக செயல் பட முடியவில்லை எனில் அணியாக செயல்படும் பொழுது அதிலிருந்து ஒருவர் உங்கள் வேலையை பகிர முன் வருவர்.

அணியின் செயல்பாடு என்பது சூழ்நிலை தலைமை பண்பை பொறுத்து அமைவதே. குறிப்பிட்ட சூழ்நிலையில் உள் ஆளுமை பண்பை எவர் சரியாகச் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே தலைமை பொறுப்பு அமைய வேண்டும்.

மேற்கூறிய கதையில் முயல் மற்றும் ஆமை இரண்டுமே தான் தோல்வி அடைந்த பின் சோர்ந்து விடவில்லை.
இரண்டு சூழ்நிலையிலும் ஆமை கடினமாக தான் உழைத்தது ஆனால் அதன் வெற்றிக்கு காரணம் தன் செயல்பாட்டு முறையில் கொண்டு வந்த சிறிய மாற்றமே.

எதிரியை அறிந்து போட்டியிடாமல் சூழ்நிலையை அறிந்து போட்டியிட்டால் நாம் நமது செயல்பாட்டில் அதிகளவு முன்னேற்றம் அடைவோம்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
தமிழாக்கம்: இ. முத்தழகன்.( அகரம் அழகன்)

No comments:

Post a Comment

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...