ஓடும் நதி போல,
ஓங்கும் அலை போல,
நில்லாமல் கரை தொடும்,
நிகரில்லா பெண்ணினமே,
உந்தன் தியாகமதை
எண்ணத்தான் கணக்குண்டோ?
மலர்ந்த வீட்டின் மனம்
மறந்து, மணந்த வீட்டின்
மனம் மலர, நினைவுகளை
கடந்து நிற்பதை தான்
தியாகம் என சொல்லலாகுமோ?
வாக்கப்பட்டு வந்த வீட்டில் - புது
வழக்கமதை கற்றிட்டு
வாசல் கோலமிட்டு,
வந்தவருக்கு வணக்கமிட்டு,
வாய்க்கு சுவை உணவிட்டு,
வாரிசை தான் சுமந்து, நாளும்
வந்தனம் தான் செய்யும்
செயலதை தான்,
தியாகம் என சொல்லலாகுமோ?
மன்னவன் முன்செல்ல
அவன்தன் முதுகெலும்பாக
பின்னவள் நீ செல்ல,
மணவாளனை,
வாழ்த்தும் ஊரதுதான்,
உன்னை மறந்ததை,
மறந்துவிடும் தன்மையதை
தியாகம் என சொல்லலாகுமோ?
செய்யும் வேலைதான்
அச்சாய் ஒத்திருக்க,
ஆணினம் என்பதனால்
ஊதியம் அதிகம்
கொடுத்திடும் சமூகமதை
பொருத்திருக்கும் உன் செயலை,
தியாகம் என சொல்லலாகுமோ?
அதிகாரம் தான் காட்டி,
ஆதிக்கம் தான் செலுத்தி,
இழிவாய் தான் பேசி,
ஈதை தான் தந்து,
உற்றார் முன் இகழ்ந்து,
ஊரார் முன் ஏசி,
எட்டி தான் உதைத்து,
ஏளனம் தான் பேசி,
ஐயுரவு தான் காட்டி,
ஒடுக்குமுறை தான் நீட்டி,
ஓரம் கட்டி இழிநிலை காட்டி,
ஔவியம் கொள்ளும் ஆணினத்தை,
அன்பால் தான் திருத்தி,
ஆதரவு தான் தந்து,
இன்முகம் தான் காட்டி,
ஈடில்லா தியாகம் தந்து,
உறவின் மகிமை காட்டி,
ஊன்றுகோலாய் துணை நின்று,
எண்ணத்தால் நிமிர்ந்து,
ஏற்றத்தாழ்வு மறந்து,
ஐந்தொழிலும் ஒருசேர
ஒன்றாய் தான் செய்து,
ஓர்மை தான் கொண்டு,
ஔடதமாகும் பெண்ணினமே,
வாழ்த்ததனை சொல்லிவிட்டால்
வணங்குவதாய் அர்த்தமில்லை,
அனுதினமும் தொழுதும்மை,
அடினெஞ்சில் போற்றிடுவேன்,
கழியும் வருடமதில் கடக்கும்
ஒரு நாள் பொழுது உமதல்ல,
ஆணினம் சுவாசிக்கும்
ஒவ்வோர் நொடியும் உமதே.!
பெண்மை போற்றுவோம்
ReplyDelete♥️💪
ReplyDeleteசிறப்பு வாழ்த்துக்கள் சகோ🎂🎂🎂🎂👍
ReplyDelete