Saturday, April 4, 2020

3 மாத தவணை ஒத்திவைப்பு - நன்மையா ? தீமையா?

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 3 மாதத் தவணை ஒத்திவைப்பு. நன்மையா ? தீமையா?
உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் இச்சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் தடுமாறி வருகிறது. சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மாதத் தவணைகள் என்னும் பெரும் சுமையை குறைப்பதற்காக அரசு பல நலத்திட்டங்களை அறிவித்து உள்ளது.வருவாய் இழப்பு மற்றும் சம்பளங்கள் வராமல் இருத்தல், தொழில்கள் முடங்கி போதல் போன்ற காரணிகளால் பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுப்புகள் இன்றியமையாததாகின்றது.


கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் முதற்கட்ட அறிவிப்பின்படி பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தனித்தனியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத் தவணை விடுப்பு வழிமுறையை வழங்கி வருகின்றன. இது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுவதாகும். கீழே குறிப்பிட்டுள்ள தரவின் படி கடன் பெற்றோர் தங்களுக்கான மாதத் தவணை ஒத்திவைப்பு அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த மூன்று மாத ஒத்திவைப்பு காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையானது உங்கள் அசலில் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது மிகவும் முக்கியமான தகவலாகும். இப்போது நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாதம் உங்கள் மாத தவணையை ஒத்தி வைத்தால் உங்களது கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம் 1 முதல் 1.5 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட லாம்.



இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(SBI) 31 மார்ச்2020 அன்று ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. அதில்,
"ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி எஸ்பிஐ வங்கியானது 01/03/2020 முதல் 31/05/2020 வரை வசூலிக்கப்பட உள்ள மாதத் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறது. அதே போல் 01/03/2020 முதல் 31/05/2020 வரையிலான நடைமுறை முதலீட்டின் வட்டியையும் 30/06/2020 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது "என தெரிவித்துள்ளது.


இந்த மூன்று மாத காலத்திற்கு தவனை செலுத்துவது மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கான வட்டி கணக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு நாம் செலுத்த வேண்டிய வட்டி தொகையானது நமது வாங்கிய அசல் உடன் சேர்க்கப்படும். இதனால், ஒன்று நாம் இனிவரும் காலங்களில் செலுத்த வேண்டிய மாத தவணைகள் அதிகமாகும் அல்லது கடன் பெற்றோர் அதனை செலுத்தும் மாதத் தவணைகள் நீட்டிக்கப்படும்.




சில வங்கிகள் வெளியிட்டுள்ள மாதத் தவணை ஒத்திவைப்பு விபரங்களை இங்கு காணலாம் :

ஐசிஐசிஐ வங்கி :
( ICICI Bank )


இவ்வங்கியானது தனது கடன்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.

"A வகை கடன்கள்"
இவை தானியங்கியாக மாதத் தவணை ஒத்திவைப்பு தேர்வு செய்யும். அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

"B" வகை கடன்கள்
இவ்வாறு இந்த வகையில் தானியங்கியாக மாதத் தவணை ஒத்திவைப்பு நேராது. நாம் ஒத்திவைப்பு வேண்டுமானால் கீழ் உள்ள வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
இணையதள முகவரி :
https://www.icicibank.com/managed-assets/docs/personal/COVID-regulatory-package-FAQs.pdf

எச்டிஎஃப்சி வங்கி
(HDFC Bank)
உங்களுக்கு மாதத் தவணை ஒத்திவைப்பு வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யத் தேவையில்லை.உங்களுக்கு ஒருவேளை மாதத் தவணை ஒத்திவைப்பு வேண்டுமானால் நீங்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி அதை செயல்படுத்திக் கொள்ளலாம்.

இணையதள முகவரி :
https://www.hdfcbank.com/personal/pay/payment-solutions/loan-repayment



கோடக் மஹிந்திரா வங்கி
(Kotak Mahindra Bank)


மாதத் தவணை ஒத்தி வைப்பு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் வங்கிக்கு ஒரு ஈமெயில் கடிதம் எழுத வேண்டும். இந்த ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு முகவரி : 
https://www.kotak.com

ஐடிபிஐ வங்கி
(IDBI Bank )

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை ஒத்திவைப்பு இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் moratorium@idbi.co.in என்ற முகவரிக்கு ஏப்ரல் 15 2020 க்குள் இமெயில் அனுப்ப வேண்டும்.

இணைப்பு முகவரி :
https://www.idbibank.in/faq-covid-installment.asp


இந்த தவணை ஒத்திவைப்பு கீழ்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம் :

உதாரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையானது ஒரு லட்சமும் (RS.1,00,000) அதற்கான வட்டி 12 சதவீதமாக இருக்கும் போது, நீங்கள் மாத மாதம் செலுத்த வேண்டிய வட்டி ₹1000 ரூபாய். இப்பொழுது நீங்கள் 3மாதம் மாதத்தவணை ஒத்திவைப்பு முடிவை எடுத்தால், நீங்கள் மூன்று மாதம் கழித்து நீங்கள் ₹3030.10 ரூபாய் வட்டியாக கட்ட வேண்டி வரும்.


அதேபோல, இப்போது 20 லட்ச ரூபாய்க்கு ஒரு வாகனம் வாங்கியிருந்தால் ஐந்து வருடத்திற்கு 9.5 சதவீத வட்டி என்று இருந்தால் நீங்கள் மூன்று மாதத்திற்கான வட்டியாக கூடுதலாக 47 ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டிய வரும் (அதாவது இது 1.5 மாதத்திற்கான கூடுதல் தவணைத் தொகைக்கு ஈடான தொகையாகும்)





எந்தன் ஆலோசனை யாதனின் :

உங்கள் பணம் வருவாய்க்கான தடை இருந்தாலோ அல்லது உங்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருந்தாலோ, நீங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் நீங்கள் செலுத்தவேண்டிய மாத தவணைக்கான வட்டி, இப்போது செலுத்தாமல் இருந்தாலும்கூட, அது 3 மாதங்களுக்கு பின்னர் உங்கள் அசலில் சேர்ந்து தவணையின் மதிப்பை அதிகப்படுத்தும் என்பதனை நாம் இவ்விடத்தில் நினைவு கொள்ளுதல் அவசியமாகிறது. உங்களால் இந்தப் பொருளாதார இக்கட்டை சமாளிக்க முடியும் என்றால், நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் மாத தவணையை செலுத்தி வரலாம், ஒருவேளை உங்களால் இந்த சூழ்நிலையை கையாளும் முடியாவிட்டால் நீங்கள் மாத தவணை ஒத்திவைப்பு நடவடிக்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தேர்வின் மூலம் உங்களின் கடன் சுமையும் நீங்கள் செலுத்த வேண்டிய காலமும் நீக்கப்படலாம் என்பதனையும், அது எதிர்காலத்தில் தங்களுக்கு மேலும் ஒரு சுமைதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி.



(இந்த தரவு பயனுள்ளதாக இருந்தால் மற்றோர்க்கும் பகிர்ந்து உதவவும்)

1 comment:

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...