Wednesday, October 17, 2018

நவராத்திரி பண்டிகையும் அதன் சிறப்பம்சங்களும்

இதோ வந்து விட்டது அந்த பண்டிகை. தெருவெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கும் பூ மாலைகள் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தினம் மாலை அன்றும் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஒன்பது நாட்களும் கடவுளுக்கே பண்டிகை தினம் தான். ஆம் சரிதான் நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது.பெண் தெய்வங்களில் மிகவும் சக்தியான தெய்வம் என்று கூறப்படும் துர்க்கை அம்மனை வழிபடும் விதமாக கொண்டாடப்படும் திருநாள் தான் இந்த நவராத்திரி பண்டிகை.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரால் கொண்டாடப்படும் இந்த விழாவைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது இங்கே காண்போம்.

நவ என்றால் ஒன்பது 9 நாட்களில் 9 வடிவமாய் துர்க்கை அம்மன் அவதாரம் எடுத்ததால் இது நவராத்திரி எனப்படுகிறது.

வெவ்வேறு விதமாக கதைகள் கூறப்பட்டாலும். இந்த  பண்டிகை கொண்டாடப்படுவதின் சாராம்சம் ஒன்றுதான். தீமையை வெற்றி கொள்ளும் நன்மை. பல்வேறு கதைகள்  இருந்தாலும் இரண்டு கதைகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. முதல் கதையானது இலங்கையின் மன்னனான இராவணன் மான் வேஷம் கொண்டு சீதையைத் தன் வசப்படுத்தி இலங்கைக்கு கடத்திச் சென்றான். சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு சென்ற ராமன் அங்கு ராவணனோடு ஒன்பது ஒன்பது நாட்கள் போரிடுகிறான். பத்தாவது நாளில் இறுதிப்போரில் பத்து தலைகளைக் கொண்ட ராமனை தனது அம்பை கொண்டு அவனை வீழ்த்தினார். ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாளில் இந்த திருவிழா ராவணனின் சகோதரர்களாகிய மேகதாது மற்றும் கும்பகர்ணனை வீழ்த்தியதோடு முடிவடைகிறது.
இதன் இரண்டாவது கதை  துர்க்கை அம்மனை பற்றியது இந்த கதை பெரும்பாலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொல்லப்படும் கதை ஆகும். அதாவது துர்க்கை அம்மன் மகிஷாசுரனுடன் போரிட்டு தர்மத்தை நிலைநாட்டிய நாளையே துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த கதையானது தேவி மகாத்மியம் என்னும் நூலில் உள்ளது.

நமது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இது கொழு என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வண்ண பொம்மைகளைக் கொண்டு நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்காரம் செய்து மேஜையில் அடுக்கி வைப்பது வழக்கம்.நவராத்திரி அன்று ஒவ்வொரு மாலையும் வீட்டில் அருகில் இருப்பவர்கள் வந்து கூட்டாக பஜனைகள் செய்வார்கள். வழிபாடு  செய்து முடித்தவுடன் அவர்கள் அனைவருக்கும் சுண்டல் முதலிய நவதானியங்களை ஒவ்வொரு நாளும் கொடுப்பது வழக்கம்.இந்த திருநாட்களில் கோயில்களில் பரத நாட்டியம் மோகினி ஆட்டம் முதலியன நடைபெறும்.

கர்நாடக மாநிலத்தில் முக்கியமாக மைசூர் அரண்மனையில் இவ் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இந்த விழாவினை காண உலகம் முழுவதில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். தசரா பண்டிகையை ஒட்டி அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்டது போல நவராத்திரி திருநாள் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது பத்தாம் திருநாளில் கலைஞர்களால் ராமாயணம் நாடகம் நடத்தப்படுகிறது. பத்தாவது நாளில் ஆட்டம் பாட்டம் மகிழ்ச்சி என பத்தாவது நாள் சிறப்பாய் நிறைவடைகிறது.
அந்த ஒன்பது நாட்களும் துர்க்கையம்மன் எடுத்த அவதாரங்களுக்கும் ஒவ்வொரு கதை உண்டு.

முதல் நாள் சைல புத்ரி

முதல் நாள் பார்வதியின் அவதாரமாக துர்க்கையம்மன் பார்க்கப்படுகிறாள். இதில் பார்வதி சிவனின் வாகனமான நந்தியின் மேல் அமர்ந்து ஒரு கையில் திரிசூலமும், ஒரு கையில் தாமரையும் வைத்திருப்பதாய் புராணங்கள் சொல்கின்றன. இந்தச் விளக்குத் திரியை மகாகாளியின் நேரடி அவதாரமாகவும் பார்க்கின்றனர். இந்த நாளின் வண்ணம் சிவப்பு அதாவது செயலையும், கோபத்தையும் குறிப்பதால் இந்த நாள் அமைகிறது.

இரண்டாம் நாள் பிரம்மசாரிணி

இதிலும் துர்க்கை பார்வதியின் அவதாரம் எடுக்கிறாள். இதில் பார்வதி மனம் ஏதும் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருப்பதால் பிரம்மசாரிணி எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.இந்தத் திருநாளில் மோக்ஷம் கிடைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் வேண்டப்படுகிறது. இந்த அவதாரத்தில் அவள் வெறும் காலால் நடந்து, கைகளில் ஜப மாலையும், கமண்டலத்தையும் வைத்திருக்கிறாள். அது அமைதியையும் குறிப்பதாகும் இந்த நாளில் வண்ணம் மஞ்சள். அது அமைதியையும் சக்தியையும் கொடுக்கிறது.

மூன்றாம் நாள் சந்திரகாந்தா

இந்தத் திருநாளில் பார்வதி சிவனை மண முடிந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். அந்த கோலத்தில் பார்வதியின் முகம் நிலவை விடவும் அழகாக அழகாய் தோன்றியதால் இந்த நாளுக்கு சந்திரகாந்தா என்று பெயர் வந்தது. இது அழகையும் வீரத்தையும் குறிக்கிறது.

நான்காம் நாள் குஷ்முந்தா

இந்த அவதாரத்தில் பார்வதிதேவியை சதுர்த்தியன்று வழிபடுவர். இந்தக் கோலத்தில் இவ்வுலகையே படைத்தது மாபெரும் சக்தியாக அவளை பாவிக்கின்றனர் . இந்த அவதாரத்தில் பார்வதி எட்டு கைகளோடு புலியின் மீது அமர்ந்து பவனி வருகிறாள் இந்த நாளில் வண்ணம் பச்சை.

ஐந்தாம் நாள் ஸ்கந்த மாதா

இந்த நாளில் பார்வதிதேவியை பஞ்சமி தினத்தில் வழிபடுவர்.  இந்த நாளில் தாயாக காட்சி தருவாள்.இந்த நாளின் மகிமையானது தான் பெற்ற பிள்ளை ஏதாவது ஒரு ஆபத்திலிருந்து பெற்ற தாயை எப்படி உருமாறுவதை வெளிக்கொணரும் இதமாய் அமைந்துள்ளது.கோபம் கொண்ட ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து நான்கு கைகளுடன் ஒரு கையில் குழந்தையை வைத்திருப்பதாய் இந்த நாளில் காட்சி தருவாள்.

ஆறாம் நாள் காத்தியாயினி

துர்க்கையின் அவதாரமாய் கார்த்திகாவை இந்த பூமியில் அவதரித்த நாள் இந்த நாள் ஆகும். இந்த கார்த்தி யாவை போரின் கடவுள் என்று அழைக்கின்றனர். துர்க்கையம்மன் எடுத்த அவதாரங்களில் இது மிகவும் உக்கிரமான அவதாரம் என்று புராணங்கள் கூறுகின்றன. நான்கு கைகளில் போர் ஆயுதங்களுடன் சிங்கத்தின் மீது வலம் வருபவர் அன்றைய தினம் காட்சி தருகிறார்.

ஏழாம் நாள் கல் ரத்ரி

சப்தமி திருநாளில் வழிபடும் தெய்வம் இந்த கல் ரத்ரி. இந்த அவதாரமும் உக்கிரமான அவதாரமாக பார்க்கப்படுகிறது.இந்த அவதாரத்தில் தனது அழகான தோற்றத்தை விடுத்து சும்ப நிசும்ப என்ற அரக்கர்களை கொன்று அவதாரம் இது. இந்த நாளில் நிறம் வெண்மை. இந்த நாளில்தான் துர்க்கையின் நிறம் கருப்பாக மாறியது.

எட்டாம் நாள் மஹா கௌரி

இந்தத் திருநாள் ஆனது அறிவுக் கூர்மைக்கும் அமைதிக்கும் உரித்தான நாளாக பார்க்கப்படுகிறது. சிவனைக் காண பல்வேறு காடுகளையும் கடந்து சிரமப்பட்டு கைலாயத்தை அடைந்த துர்க்கை அம்மனை சிவன் கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்தால் இந்தப் பெயர் பெற்றாள்.

ஒன்பதாவது நாள் சித்திதாத்ரி

ஒன்பது மற்றும் நிறைவான நாள் நவமி ஆகும். இந்தத் திருநாளில் துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் பூணுகிறாள்.தாமரை மலர் மீது அமர்ந்து காட்சி தரும் துர்க்கை எட்டு சித்திகளையும் தன்னுள் மடக்கியவாறு காட்சி தருகிறாள்.

No comments:

Post a Comment

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...