காடு கரை ஏரி குளம் தான் படைத்தேன்,
கடைசியில் இவை காக்க,
மனிதவினம் தான் படைத்தேன்.
ஆடி வந்ததும் என்னை
தேடி வந்தது சூறை காற்று,
மறந்தும் கூட மறக்கவில்லை
மும்மாரி மழை கொடுக்க,
ஆஹா, அற்புதம் என்றேன்,
மனித மனம் மரகதம் என்றேன்,
காப்பதிலே என்னை மிஞ்சுவான் என்றேன்,
அளவுகடந்த ஆவலில்,
கோடை விடுமுறைக்கு,
விண்ணுலகில் விடுப்பு கேட்டு
மண்ணுலகம் தான் வந்தேன்,
உலகம் சுற்றினேன்,
என்னை மறந்தேன்,
எங்கும் பச்சை பசேல்,
செழிக்கும் காடு,
துடிக்கும் ஆறு,
மிடுக்கும் மலை,
சிலிர்க்கும் மழை,
துளிர்க்கும் செடி,
மடை மீதேறி நின்று
ஏரிக்கரை தான் பார்த்தேன்,
ஒருமுறையும் மறுக்காமல் மறுகால், பாய்ந்தது.
படைத்த பொழுதை விட
இப்பொழுது பூரித்து
கிடந்தது பூமி,
அகம் மகிழ்ந்தேன்,
அற்புதம் என்றேன்.
நீங்கா நினைவோடு
விடைபெற்றேன்.
விண்ணுலகம் தான் சென்று,
மறுமுறை தான் வந்தேன்,
வழி மாறி வந்தோமோ என்று
விழி கசக்கி பார்த்தேன்,
அதே இடம் தான்,
அதே மக்கள் தான்,
ஆனால்...
கடந்த முறை கண்ட காட்சி
கனவாகிப் போனதோ,
மேற்கே சென்றேன்,
பச்சை போர்வை போர்த்தி
மண்ணுலக மனிதனுக்கும்,
வின்னுலகத்திற்கும் சேர்த்து
ஆக்சிஜன் தான் அனுப்பிய,
அமாசான் காடு,
செக்கச் சிவப்பாய்
தீந்தனல் கக்கியது,
அகதியாய் அ(டி)டைபட்டு கிடந்தது,
பிறப்பு முதல் இறப்பு வரை,
மனிதனை அனைத்தது மரம்,
பற்றி எரியும் போது கூட
அணைக்க மறந்து ஆண்ட்ராய்டு
ஆதிக்கத்தில் அடிமையாய் மனிதவினம்.
தலை கவிழ்ந்து தலை வைத்தேன்
தெற்குப் பக்கம்,
இயற்கையை கடவுளாய் வழிபட்ட
தமிழினம் கண்டிப்பாய் மாறாது
என்ற நம்பிக்கை தான் விடவில்லை.
கரடு முரடு பாதையிலே
கடந்து வர காலம் தான் கடந்து போனது
மூஞ்சூறுக்கும் மூச்சிறைத்து போனது.
வந்து சேர்ந்தேன்,
வாய் பிளந்தேன்,
என்னைப் போல் ஆயிரம் சிலைகள்,
ஊர்வலமாக நான் செல்ல,
என்னையே படைத்து
ஊர்வலமாய் கொண்டு சென்றனர்.
அடடா, என்று ஆச்சரியம் கொண்டு,
அவர்களைத் தான் தொடர்ந்தேன்.
வெட்ட வெளி மைதானம் கண்டேன்.
மைதானம் நடுவே குழி ஒன்று,
குழிக்குள்ளே தண்ணீர் நிரப்பும்
சுமையுந்து இரண்டு,
என்னடா கூத்தென்று
எண்ணி பார்த்ததால்,
கரைக்க நீர் இன்றி
கரையில் குழி வெட்டி
குழிக்குள் கரைக்க போகிறார்களாம்.
என்னடா கொடுமை என்று,
மடை மீதேறி நின்று
ஏரிக்கரை தான் பார்த்தேன்,
அப்போது தான் புரிந்தது, காக்க படைத்தது மனிதனை அல்ல மடையர்களை என்று...!
கடைசியில் இவை காக்க,
மனிதவினம் தான் படைத்தேன்.
ஆடி வந்ததும் என்னை
தேடி வந்தது சூறை காற்று,
மறந்தும் கூட மறக்கவில்லை
மும்மாரி மழை கொடுக்க,
ஆஹா, அற்புதம் என்றேன்,
மனித மனம் மரகதம் என்றேன்,
காப்பதிலே என்னை மிஞ்சுவான் என்றேன்,
அளவுகடந்த ஆவலில்,
கோடை விடுமுறைக்கு,
விண்ணுலகில் விடுப்பு கேட்டு
மண்ணுலகம் தான் வந்தேன்,
உலகம் சுற்றினேன்,
என்னை மறந்தேன்,
எங்கும் பச்சை பசேல்,
செழிக்கும் காடு,
துடிக்கும் ஆறு,
மிடுக்கும் மலை,
சிலிர்க்கும் மழை,
துளிர்க்கும் செடி,
மடை மீதேறி நின்று
ஏரிக்கரை தான் பார்த்தேன்,
ஒருமுறையும் மறுக்காமல் மறுகால், பாய்ந்தது.
படைத்த பொழுதை விட
இப்பொழுது பூரித்து
கிடந்தது பூமி,
அகம் மகிழ்ந்தேன்,
அற்புதம் என்றேன்.
நீங்கா நினைவோடு
விடைபெற்றேன்.
விண்ணுலகம் தான் சென்று,
மறுமுறை தான் வந்தேன்,
வழி மாறி வந்தோமோ என்று
விழி கசக்கி பார்த்தேன்,
அதே இடம் தான்,
அதே மக்கள் தான்,
ஆனால்...
கடந்த முறை கண்ட காட்சி
கனவாகிப் போனதோ,
மேற்கே சென்றேன்,
பச்சை போர்வை போர்த்தி
மண்ணுலக மனிதனுக்கும்,
வின்னுலகத்திற்கும் சேர்த்து
ஆக்சிஜன் தான் அனுப்பிய,
அமாசான் காடு,
செக்கச் சிவப்பாய்
தீந்தனல் கக்கியது,
அகதியாய் அ(டி)டைபட்டு கிடந்தது,
பிறப்பு முதல் இறப்பு வரை,
மனிதனை அனைத்தது மரம்,
பற்றி எரியும் போது கூட
அணைக்க மறந்து ஆண்ட்ராய்டு
ஆதிக்கத்தில் அடிமையாய் மனிதவினம்.
தலை கவிழ்ந்து தலை வைத்தேன்
தெற்குப் பக்கம்,
இயற்கையை கடவுளாய் வழிபட்ட
தமிழினம் கண்டிப்பாய் மாறாது
என்ற நம்பிக்கை தான் விடவில்லை.
கரடு முரடு பாதையிலே
கடந்து வர காலம் தான் கடந்து போனது
மூஞ்சூறுக்கும் மூச்சிறைத்து போனது.
வந்து சேர்ந்தேன்,
வாய் பிளந்தேன்,
என்னைப் போல் ஆயிரம் சிலைகள்,
ஊர்வலமாக நான் செல்ல,
என்னையே படைத்து
ஊர்வலமாய் கொண்டு சென்றனர்.
அடடா, என்று ஆச்சரியம் கொண்டு,
அவர்களைத் தான் தொடர்ந்தேன்.
வெட்ட வெளி மைதானம் கண்டேன்.
மைதானம் நடுவே குழி ஒன்று,
குழிக்குள்ளே தண்ணீர் நிரப்பும்
சுமையுந்து இரண்டு,
என்னடா கூத்தென்று
எண்ணி பார்த்ததால்,
கரைக்க நீர் இன்றி
கரையில் குழி வெட்டி
குழிக்குள் கரைக்க போகிறார்களாம்.
என்னடா கொடுமை என்று,
மடை மீதேறி நின்று
ஏரிக்கரை தான் பார்த்தேன்,
அப்போது தான் புரிந்தது, காக்க படைத்தது மனிதனை அல்ல மடையர்களை என்று...!
Columbia Titanium Boots - TheTianiumSuit
ReplyDeleteThe new titanium linear compensator Levi's jersey is inspired microtouch titanium by the citizen titanium dive watch original titanium gravel bike Levi's and is crafted titanium grades with an extremely high quality material. This leather boot is crafted with a quality